கூடலூரில் பனியர் பழங்குடியின மக்களுக்கு வேகமாக பரவிவரும் ஸ்கேபிஸ் நோய் - குழந்தைகளை தாக்கும் தோல் நோயால் மக்கள் அச்சம்
Jul 31 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூடலூரில் பனியர் பழங்குடியின மக்களுக்கு வேகமாக பரவி வரும் ஸ்கேபிஸ் எனப்படும் தோல்நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட செலுக்காடி கோழிகெட் என்ற கிராமத்தில் பனியர் இனத்தை சேர்ந்த 35-கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனம் மற்றும் வன விலங்குகளை சார்ந்து வாழும் இவர்கள் பொருளாதாரம் மற்றும் நகர தொடர்பிலிருந்து மிகவும் பின் தங்கி உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஸ்கேபிஸ் என்ற தோல் நோய் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக கை, கால்கள் மற்றும் முகங்களில் புண்கள் ஏற்பட்டு, அரிப்பு, வலி மற்றும் எரிச்சலால் சோர்வடைந்து சில குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.