பெரம்பலூரில் பெண்ணை திருமணம் செய்து தரக்கோரி கொலை மிரட்டல் : ஒருதலையாக காதலித்து வந்த ரவுடி அத்துமீறல் - 2 பேர் கைது
Sep 17 2021 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில், ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து தரக்கோரி கொலை மிரட்டல் விடுத்து, பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வசித்து வரும் கார் ஓட்டுநர் ஒருவரின் மகளை, நீலகண்டன் என்ற ரவுடி, ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் அந்த பெண்ணிற்கு, நீலகண்டன், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அந்த பெண்ணின் வீட்டிற்கு, தனது நண்பர் சத்தியமூர்த்தி என்பவருடன் சென்ற நீலகண்டன், வீட்டில் இருந்தவர்களிடம், பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்காமல் வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்தால் பெண்ணை கொலை செய்து விடுவேன் என்றும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர், பெண்ணின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை தாக்கி சேதப்படுத்தி, வாசலில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு, நீலகண்டனும், அவரது நண்பரும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் நீலகண்டன், சத்தியமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.