சென்னை திருவொற்றியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள்- அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Sep 17 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவொற்றியூரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவொற்றியூர் பெரியார் நகரில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, வட சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சி.பி.ராமஜெயம், மாநில கழக மீனவர் அணி செயலாளர் திரு. டி. ஆறுமுகம், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பிளாஸ்டிக் திரு.கே. ஏ. குப்பன், மாவட்ட இணைச்செயலாளர் திரு. ஜே. மதிவதனம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.