தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாள் - அ.ம.மு.க. சார்பில் மரியாதை : பெரியார் திருவுருவப் படத்திற்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் மலர் மரியாதை
Sep 17 2021 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, அ.ம.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு, அமமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு அமமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கழக துணை பொதுச் செயலாளர் திரு ஜி.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி ஆர் சரஸ்வதி, அமைப்புச் செயலாளர்கள் திருவான்மியூர் திரு. முருகன், திரு. நேதாஜி கணேசன், கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி கிருஷ்ணா ராதா கிருஷ்ணன், இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் வியாசர்பாடி திரு. ராஜு, மாவட்ட கழக செயலாளர்கள் திரு சுகுமார்பாபு, திரு பரணீஸ்வரன், திரு எல். ராஜேந்திரன், திரு. ஏ.ஆர். பழனி, திரு. சங்கர் ராஜா, நீலாங்கரை திரு. முனுசாமி, திரு. சி.பி. ராமஜெயம், திரு. வேதாசலம், கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.