தந்தை பெரியார் பிறந்தநாள் : "சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம்'' அமைக்க உறுதிமொழி ஏற்பு - முதலமைச்சர் பங்கேற்பு
Sep 17 2021 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழாவில், முதலமைச்சர் பங்கேற்றார்.
தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்பு விழா, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைப்பெற்றது. முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பு நெறியும் வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடித்து, சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக செயல்பாடுகள் அமையும் எனவும் உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் பயணம் தொடர உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.