ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு வலியுறுத்தல்
Sep 17 2021 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, கடந்த 1995-ல் ஃபோர்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக 25 ஆயிரம் பேருக்கும் வாழ்வாதாரமாக திகழும் ஃபோர்டு நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு பின், கடும் இழப்பு காரணமாக நிறுவனத்தை விரைவில் மூடப்போவதாக அறிவித்திருப்பதால் அதன் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளதாக திரு.கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.