வங்கி மேலாளர் என கூறி மூதாட்டியிடம் ரூ.1.19 லட்சத்தை திருட்டிச் சென்ற இளைஞர் - சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

Sep 17 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பரமக்குடி அருகே வங்கி மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி, கடனுக்காக வைக்கப்பட்ட நகையை திருப்புவதற்காக ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயுடன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி மேலாளர் ஒருவர் என கூறிய இளைஞர் ஒருவர் பாண்டியம்மாளிடம் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஸ்டாம்ப் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தப் போது, பணம் பெற்ற இளைஞர் மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு விரைந்த பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார், வங்கியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி, மாயமான இளைஞரை தேடி வருகின்றனர். பரமக்குடியில் பட்டப்பகலில் வங்கியில் மூதாட்டியை ஏமாற்றி இளைஞர் ஒருவர் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00