திருவாடானையில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபானக் கூடத்துக்கு சீல்வைப்பு
Sep 17 2021 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாடானையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்தை மாவட்ட வருவாய் அதிகாரிகள் பூட்டிச் சீல்வைத்தனர். திருவாடானை மேலத்தெருவில் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தை மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உரிய உரிமம் இல்லாமல் மதுக்கூடம் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அதனை சீல்வைக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். அதன்பேரில், திருவாடானை வட்டாச்சியர் செந்தில்வேல் முருகன் தலைமையில் அதிகாரிகள் பூட்டிச் சீல்வைத்தனர்.