தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, டீசல் எஞ்சின் இயக்கி சோதனை
Sep 17 2021 8:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணிகள் நடைபெறும் நிலையில், தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, முதன் முதலாக டீசல் எஞ்சினை முறைப்படி இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். முறையாக 60 கிலோ மீட்டர், 80 கிலோ மீட்டர் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ரயில் பாதையின் செயல்பாடுகள் குறித்து பதிவு செய்கின்றனர். இதனால் மாலை 6 மணி வரை, இந்த வழித்தடத்தில் ரயில் இஞ்சின் இயக்கப்பட்டது.