வல்லூர் தேசிய அனல் மின் நிலைய 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
Oct 27 2021 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் தேசிய அனல் மின் நிலைய 2-வது அலகில், கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு, இன்று 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மின் நிலைய 2-வது அலகில் கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு ஏற்பட்டதால், அங்கு 500 மெகாவாட் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. கொதிகலன் கசிவு சரி செய்யப்பட்ட நிலையில், 2-வது நிலையில் இன்று மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி இன்று தொடங்கியதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.