பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் குருபூஜை விழா : ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் 8,500 போலீசார் - அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும்

Oct 27 2021 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி திரு.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று வரும் அரசியல் கட்சி தலைவர்களும் சமுதாய தலைவர்களும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தான் வர வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆட்சியர் ஒதுக்கித் தரும் நேரத்தில் தான் வரவேண்டும் என்றும், ஜோதி, முளைப்பாரி, பால்குடம், சிலம்ப ஊர்வலம் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 39 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது - 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி மேற்பார்வையில் தென்மண்டல ஐஜி தலைமையில் 4 டிஐஜி க்கள், 19 எஸ்.பி.க்கள், 28 ஏஎஸ்பிக்கள் 70 டிஎஸ்பி.க்கள் உட்பட 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00