திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே மணல் திருடி விற்பனை : வருவாய் துறை விசாரணை
Oct 27 2021 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள குட்டையில், மணல் திருடி விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பல் குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கணபதி பாளையம் ஊராட்சி மன்றத் தலைவியான தி.மு.க.வைச் சேர்ந்த நாகேஸ்வரியின் கணவரும், பல்லடம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளருமான சோமசுந்தரம் என்பவர், மண் கேட்ட நபர் ஒருவரிடம் 3 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தால், விநியோகம் செய்வதாக பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.