மதுரை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் வருமானவரித்துறை சோதனை : கணினிகள், ஆவணங்கள் ஆய்வு
Dec 1 2021 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில், 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அழகப்பன்நகர் பகுதியில் அமைந்துள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில், இன்று காலை 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். கடையில் உள்ள கணிணிகள், ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா எனவும், வர்த்தக வரவு செலவு குறித்தும் ஆய்வு நடத்திவரும் வருமான வரித்துறையினர், கடையின் காசாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வருமான வரிசோதனையை முன்னிட்டு கதவுகள் அடைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.