திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்னாங்குளம் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு

Dec 1 2021 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்னாங்குளம் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால், பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பின. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவேரிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரால் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னாங்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. 20-க்‍கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்‍கள், இப்பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், தரைப்பாலம் மூழ்கியதால், 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்‍குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் சிறார்கள் உள்ளிட்டோர் விளையாடி மகிழ்கின்றனர். அசம்பாதவிதங்களைத் தவிர்க்‍க மாவட்ட நிர்வாகம் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென அப்பகுதி மக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00