திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்னாங்குளம் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
Dec 1 2021 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்னாங்குளம் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால், பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பின. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவேரிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரால் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னாங்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இப்பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், தரைப்பாலம் மூழ்கியதால், 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் சிறார்கள் உள்ளிட்டோர் விளையாடி மகிழ்கின்றனர். அசம்பாதவிதங்களைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.