3 நாட்களுக்குப் பிறகு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு
Dec 2 2021 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரின் உடல் கடந்த 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காரையும், அதில் சிக்கியிருந்த முருகன் என்பவரையும் தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ரப்பர் படகு மூலம்
ஆற்றில் தேடினர். இதில் தரைப்பாலத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் ஆற்றுக்குள் கார் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.