சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் - முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பணிகள் தொடங்கப்படும் : நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
Jan 21 2022 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை - சேலம் எட்டுவழி சாலை திட்டம், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அவர் அறிவறுத்தலின்பேரில் பணிகள் தொடங்கப்படும் என்று, நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எட்டுவழி சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், எட்டுவழி சாலை திட்ட பணிகள் குறித்து மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில், பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.