கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாமல், டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைப்பதா? - தமிழக அரசுக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்
Jan 21 2022 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாத தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்து, வருமானத்தை மட்டுமே பார்த்து வருவதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வளவுக்கு பிறகும், எத்தனையோ பேர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தி.மு.க. அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதாக திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா? என்றும் திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.