நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கு : இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Jan 21 2022 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது எனவும், தள்ளிவைக்க கோரியும் தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி 27க்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதே என கேள்வி எழுப்பினர்.

மாநிலத்தில் உள்ள நிலையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்துள்ளது என மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைவதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்‍கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரியபடி இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளதோடு, விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00