நெல்லை: தாமிரபரணி நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
Jan 21 2022 6:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக வனத்துறை ஒருங்கிணைப்பில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவளக் காப்பு மையம் உள்பட சில அமைப்புகள் இணைந்து நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். சுற்றுச் சூழல் நிபுணர்கள் தலைமையில் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் 60 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. பறவைகள் கணக்கெடுப்புப் பணி நாளையும் நடைபெறுகிறது.