திருப்பூர்: தி.மு.க வார்டு உறுப்பினரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்
Jan 21 2022 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே தூய்மைப் பணியாளரை தாக்கிய தி.மு.க வார்டு உறுப்பினரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ரஹார புத்தூர் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி அருக்காணி, தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அருக்காணி, பேருந்து நிலைய பகுதியில் மற்றொரு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தி.மு.க வார்டு உறுப்பினர் மசூதாவின் சகோதரர் ஜியாபு, மூதாட்டி அருக்காணியை கன்னத்தில் அறைந்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் மனமுடைந்த அருக்காணி, ஜியாபு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.