தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 3-வது அலகில் மட்டும் உற்பத்தி - 4 அலகுகளில் இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லை

May 13 2022 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 4 அலகுகள் செயல்படாத நிலையில், 3வது அலகில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அல​குகளிலும் தலா 210 மெகாவாட் என மொத்தம் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக நிலவும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 அலகுகளிலும் முழு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக மூன்றாவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 5 நாட்களில் 5 ஆயிரத்து 250 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனல் மின் நிலையத்தில் 15 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இரண்டு அலகுகளில் நாளொன்றுக்கு முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00