தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 3-வது அலகில் மட்டும் உற்பத்தி - 4 அலகுகளில் இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லை
May 13 2022 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 4 அலகுகள் செயல்படாத நிலையில், 3வது அலகில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் தலா 210 மெகாவாட் என மொத்தம் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக நிலவும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 அலகுகளிலும் முழு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக மூன்றாவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 5 நாட்களில் 5 ஆயிரத்து 250 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனல் மின் நிலையத்தில் 15 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இரண்டு அலகுகளில் நாளொன்றுக்கு முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.