திருச்சி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வசூல்
May 18 2022 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல். இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு கிராமத்தில் பாரத பிரதமரின் வீடு திட்டத்தில் வீடுக்கட்ட தேர்வான பயனாளிகளிடம், மூன்றாயிரம் ரூபாய் வீதம் ஐந்து பேரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.