ராமநாதபுரம் ஏர்வாடி அருகே கரை ஒதுங்கிய ஒரு டன் எடை கொண்ட ராட்சத இரும்பு உருளை : கடலோரப் போலீசார் கைப்பற்றி விசாரணை
May 26 2022 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே, கடலில் மிதந்து வந்த ஒரு டன் எடை கொண்ட ராட்சத இரும்பு உருளை கரை ஒதுங்கியது. இதுகுறித்து கடலோரப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி அருகே அடச்சேரி கடற்கரைப் பகுதியில், ஒரு டன் எடை கொண்ட ராட்சத இரும்பு உருளை கடலில் மிதந்து பின்னர் கரை ஒதுங்கியது. கப்பல்கள் செல்லக் கூடிய பகுதியில் அதற்கு வழிகாட்ட இது போடப்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கியுள்ள இரும்பு மிதவை உருளையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.