திருவள்ளூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் தீ : ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

May 26 2022 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

திருவள்ளூர் அருகே போலிவாக்கம் என்ற பகுதியில் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள், ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் மிதிப்புள்ள பொருட்கள் கன்டெய்னர் லாரியில், டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த லாரி திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை அறிந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கண்டெய்னர் லாரியில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆன்லைன் விற்பனை பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன. லாரியில் பற்றிய தீ குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00