அரபிக்கடலில் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல் : ஆழ்கடலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்

May 26 2022 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வரும் சூழலில், குமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆழ்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். அதன்படி, தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவையொட்டியுள்ள அரபிக் கடலில் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது. எனவே அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் விரைவில் கரைக்கு திரும்புமாறு மாவட்ட ஆட்சியர் திரு. அரவிந்த் அறிவுறுத்தியுள்ளார். 31-ம் தேதிக்குள் தமிழகம் அல்லது கேரளாவில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகளுடன் கரை திரும்பிய பின், தகவலை தெரிவிக்குமாறு மீனவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00