காரியாபட்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவ-மாணவியர் 10 பேர் காயம்

May 26 2022 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

காரியாபட்டி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு இன்று காலை ஷேர் ஆட்டோவில் கரியபட்டி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். கல்லூரி முன்பாக மாணவ, மாணவிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மதுரை நோக்கிச் சென்ற லாரி மோதியதில், மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவ மாணவிகளை மீட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00