மணப்பாறை அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு
May 26 2022 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
மணப்பாறை அருகே பழையபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவை ஒட்டி, 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.