லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
May 28 2022 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து 7 வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தேசப்பாதுகாப்பு பணியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் அவ்வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்கள் விரைவில் முழு நலம்பெற பிரார்த்திப்பதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.