திருப்பூர்: காங்கேயத்தில் கூண்டிற்குள் புகுந்து பறவைகளை விழுங்கிய பாம்புகள்
Jun 23 2022 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், வீட்டில் வளர்க்கப்பட்ட பறவைகளை விழுங்கியதால், கூண்டிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்த பாம்புகளை, தீயணைப்பு துறையினர் மீட்டு, வனப் பகுதியில் விட்டனர்.
காங்கேயம் அடுத்த உடையார்காலனி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர், தனது வீட்டில் 2 கூண்டுகளில் 8க்கும் மேற்பட்ட வளர்ப்பு கிளிகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு 2 கூண்டுகளிலும் புகுந்த 5 அடி நீளமுள்ள 2 பாம்புகள், கூண்டிற்குள் இருந்த 4 கிளிகளை விழுங்கியது. இதனால், கூண்டிலிருந்து வெளியேற முடியாமல் இரு பாம்புகளும் சிக்கி தவித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், கூண்டுகளோடு பாம்புகளை எடுத்து சென்று, வனப் பகுதிக்குள் விட்டனர்.