கடலூரில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 3 பேர் பலி
Jun 23 2022 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூரில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் உள்ள பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் பட்டாசு ஆலை உருக்குலைந்து, அதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.