வாழ்க, ஒழிக கோஷங்களுடன் சென்னையில் கூடியது அ.தி.மு.க. பொதுக்குழு - தீர்மானங்களை கொண்டுவந்தவர்களே, அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்த விநோதம்
Jun 23 2022 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்திலேயே இருதரப்பினருக்குமான எதிரெதிர் கோஷங்களால் பெரும் குழப்பம் நிலவியது. போலி அடையாள அட்டைகளுடன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கு இடையேயான போஸ்டர் யுத்தம் தொடங்கி பல்வேறு மோதல்கள் அரங்கேறிய நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கூச்சல் குழப்பங்களுடனே தொடங்கியது. பவுன்சர் என்ற போர்வையில், ஏராளமான ஆட்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டரங்கிற்குள் நுழைத்திருந்ததாகவும், போலி அடையாள அட்டைகளுடனும், பொதுக்குழு கூட்டத்தில் ஆட்கள் அமரவைக்கப்பட்டிருந்ததாகவும் ஓ.பி.எஸ். தரப்பு குற்றம் சாட்டியது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஓ.பி.எஸ். தரப்பும், இ.பி.எஸ். தரப்பும் வாழ்க ஒழிக என்ற கோஷமிட்டு வந்ததால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது.