பொதுக்குழு மேடையில் இருந்து பாதியில் வெளியேறினார் ஓ.பி.எஸ் - சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என அறிவித்துவிட்டு வைத்திலிங்கமும் வெளியேறினார்
Jun 23 2022 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டுவந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக, ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து, கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானத்தையும் நிராகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனையும் அறிவித்து, அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 23 தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டு, மீண்டும் பொதுக்குழு கூட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டதை தங்கள் தரப்பு நிராகரிப்பதாக ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் ஒலிபெருக்கியில் அறிவித்து, கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.