செங்கல்பட்டு: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்
Jul 1 2022 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாம்பரம் அருகே தனது பிறந்தநாளில் பட்டா கத்தியில் கேக் வெட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் அர்ஜீனன் காலணியில் வசித்து வருபவர் அஜய். அஜய்க்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அஜய் தனது பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.