திமுக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Jul 1 2022 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆளும் திமுக அரசைக் கண்டித்து, திமுக-வைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்றத் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டி குண்டு குழிகள் தோண்டி பால மாதங்களாகும் இன்னும் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை அரசின் மெத்தன போக்கை கண்டித்து உள்துறை நகர்மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த ஆசை பொன் ஆசி தம்பி தலைமையில் அனைத்து கட்சியை சேர்ந்த 21 கவுன்சிலர்களும் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர் அந்த பதிவில் குளித்தலை முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குண்டு குழிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் இதற்காக வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை கூட துண்டிக்கப்பட்டது மீண்டும் இணைப்பு கொடுக்கப்படவில்லை அரசு சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முறையாகவும் சீராகவும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய நகர் மற்ற தலைவர் தலைவர் திமுகவை சேர்ந்த பொன் ஆசைத்தம்பி வரும் 13-ஆம் தேதி மிகவும் பிரசித்தி பெற்ற வாகுபலி பொருட்காட்சி குழித்துறையில் தொடங்க உள்ளது இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை தூத்துக்குடி மதுரை மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் அந்த நேரத்தில் இந்த குண்டுகளும் குழியும் மிகப்பெரிய விபத்துகளை ஏற்படுத்தும் எனவே உடனே சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார் திமுக அரசை கண்டித்து திமுகவை சேர்ந்த குழித்துறை நகர்மன்ற தலைவரே கோரிக்கை மனு கொடுத்துள்ளது குமரி மாவட்டத்தில் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.