திருப்பூரில் காவலர்களைத் தாக்‍கிவிட்டுத் தப்பியோடிய கும்பல் : சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடும் போலீசார்

Jul 1 2022 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை தாக்கிவிட்டுத் தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலையத்தில் காவலர்களாக பணி புரியும் மகாதேவன், அருள்குமார் ஆகிய இருவரும் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை வழிமறித்தபோது நிற்காமல் சென்றனர். அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரிக்‍க முயன்றபோது, மூவரில் ஒருவன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் காவலர் அருள்குமார் தலையில் தாக்கியதில் அவர் தலையில் ரத்த காயம் ஏற்பட்டு நிலைகுலைந்தார். இதைப் பயன்படுத்தி தப்ப முயன்ற அவர்களை காவலர்கள் இருவரும் விடாமல் விரட்டினர். அப்போது வாகனத்தில் கடைசியில் உட்கார்ந்திருந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் காவலர்களை வெட்ட முற்பட்டான், அதிலிருந்து லாவகமாக தப்பிய காவலர் அருள்குமாரை கையால் தாக்கி தள்ளிவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பினர். காவலர்களைத் தாக்‍கிய நபர்களை, அவனாசி போலீசார் ​சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00