தூத்துக்குடி அருகே அமையும் ராக்கெட் ஏவுதளம் - கம்பி வேலிகள் அமைக்கும் பணி மும்முரம்
Jul 6 2022 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட்ட அமராபுரம், எள்ளுவிளை, கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் இந்த பணி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.