தஞ்சாவூர்: கொள்ளிடத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Aug 5 2022 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் நீர் திறக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீரும், முக்கொம்புலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீரும், கல்லணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் 520 கன அடி நீரும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தையும் - அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் விளாங்குடி கொள்ளிடம் ஆறு கடல்போல் காட்சியளிக்கிறது. வெள்ளநீர் கரை புரண்டு ஓடுவதால் கொள்ளிடத்தின் இருபுறமும் ஒலிபெருக்கிகள் மூலம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொள்ளிடத்தில் அதிக அளவில் நீர் திறப்பதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் கரையோரங்களில் ஆழ்குழாய் பாசனம் மூலம் சாகுபடி செய்ய முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கொள்ளிடத்தில் வரும் நீரை கோடையிலும் பயன்படுத்திட தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.