திருவாரூரில் மருந்துக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய வாடிக்கையாளர் - மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்க மாத்திரை கொடுக்காததால் வெறிச்செயல்
Aug 5 2022 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள மருந்துக்கடையில் தூக்க மாத்திரை கேட்டு அடாவடியில் ஈடுபட்ட வாடிக்கையாளர் ஒருவர், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடவாசல் பேரூராட்சி அலுவலம் எதிரே ரவி என்பவருக்கு சொந்தமான மருந்துக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற செந்தில் என்பவர், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துச்சீட்டு இன்றி போதைக்காக குறிப்பிட்ட தூக்க மாத்திரையைக் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் ரவி, மன நோயாளிகளுக்காக வழங்கப்படும் இத்தகைய மாத்திரையை மருத்துவர் பரிந்துரையின்றி யாருக்கும் தரமுடியாது எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் தனது நண்பர் இமையன் என்பவருடன் மருந்துகடைக்கு சென்று ரவியை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.