திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த தாய்
Aug 5 2022 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருகே மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பரசுராமன் என்பவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 5 வயதில் நிலவரசு, 4 வயதில் குரளரசு என்ற இரண்டு மகன்களும் 3 வயதுடைய யாஷினி என்ற ஒரு மகளும் உள்ளனர். பரசுராமனுக்கும், அமுதாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சதாகுப்பம் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசிய அமுதா, தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள், நீரில் மூழ்கி பலியான மூன்று குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அமுதாவை, உயிருடன் மீட்டனர். அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.