பொள்ளாச்சி அருகே நவமலைக்கு செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
Aug 6 2022 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலைக்கு செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆழியார் அணை அடுத்துள்ள அப்பர் ஆழியாறு அணை நிரம்பியதை அடுத்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவமலைக்கு செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சமத்தூர் அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளப்பெருக்கால் தரைமட்ட பாலம் மூழ்கியது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.