முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணுவுக்கு, இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது - தமிழக அரசு அறிவிப்பு
Aug 6 2022 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான திரு. ஆர். நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் தகை சால் தமிழர் விருதுக்கு தேர்வான திரு. நல்லகண்ணுக்கு 10 லட்ச ரூபாய் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய முது பெரும் தலைவரான திரு. ஆர். நல்லகண்ணு, சுதந்திர போராட்ட தியாகியாவார். கடந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான திரு. சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.