காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
Aug 6 2022 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில், இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா, தீபக் புனியா மற்றும் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் ஆகிய மூவரும் தனித்தனியாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, வெவ்வேறு மல்யுத்தப் போட்டிகளில், இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலப் பதக்கத்தையும், இந்திய வீராங்கனைகள் அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கத்தையும், திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மேலும், மகளிர் 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தய போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் - காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.