அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு : நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Aug 8 2022 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை நாளை மறுநாளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னையில் கடந்த மாதம் 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி திரு.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகி வாதிட்ட ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் டெல்லியிலிருந்து வராததால் அவர் இன்று ஆஜராக முடியவில்லை என கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி நாளை மறுதினம் பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.