சுருளி அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு : அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 9-வது நாளாக தடை
Aug 10 2022 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 9ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக சுருளி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், தூவானம் ஏரியிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், கல் மற்றும் மணல் கலந்து வருவதாலும், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க, 9-ஆவது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.