கோவை அருகே நின்றுகொண்டிருந்த லாரி தானாக சென்றதால் விபத்து- சாலையோரம் விளையாடிக்‍கொண்டிருந்த 4 வயது சிறுவன் பலியான ​சோகம்

Aug 11 2022 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேட்டுப்பாளையம் அருகே நிறுத்திவைக்‍கப்பட்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி தானாக முன்னோக்கி சென்று 4 வயது சிறுவன் மீது மோதியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள கோவில் திருவிழாவுக்காக தனியார் தண்ணீர் டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டது. கோவிலை வந்தடைந்ததும் லாரியை​ நிறுத்திய அதன் ஓட்டுநர், லாரி முன்பின் நகராமல் இருக்க டயர்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது டேங்கர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக தானாகவே முன்னோக்கி சென்று சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரித்தீஸ் என்ற 4 வயது சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00