சேலம் அருகே பருத்தி பஞ்சு ஆலையில் பயங்கர தீ- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Aug 11 2022 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் அருகே பருத்தி பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் பருத்தி பஞ்சு ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் பஞ்சியிலிருந்து விதை நீக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பருத்தியிலிருந்து தீ பற்றி எரிந்தது. பஞ்சாலை என்பதால் மளமளவென தீ பரவி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு முழுவதும் எரியத் தொடங்கியது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த அனைவரும் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.