அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு திமுகவே காரணம் - புரட்சித்தாய் சின்னம்மா பரபரப்பு குற்றச்சாட்டு
Aug 11 2022 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாகவும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வை பெற்றி பெறச் செய்வதே தமது நோக்கம் என்றும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, அ.இ.அ.தி.மு.க. என்பது தனிப்பட்ட நபருக்கானது அல்ல என்றும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்காகவே கட்சியை தொடங்கியதாகவும் தெரிவித்தார். அ.இ.அ.தி.மு.க.வை பொறுத்தவரை தொண்டர்கள் தான் அனைத்தையும் முடிவு செய்வார்கள் என்றும், தொண்டர்கள் தம்முடன் இருப்பதாகவும், சின்னம்மா குறிப்பிட்டார்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, வரும் 2024-ம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்றும், தலைவருக்கும், அம்மாவுக்கும் தாம் செய்ய வேண்டிய கடமையாக அதை நினைப்பதாகவும் சின்னம்மா தெரிவித்தார். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்னைக்கு தி.மு.க.வே காரணம் என தாம் கருதுவதாக சின்னம்மா மேலும் குறிப்பிட்டார்.