இந்து சமய அறநிலைத்துறை, சபரீசனை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Aug 11 2022 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 320 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 2-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன், வள்ளிக் குகையில் பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து சிறப்பு யாகம் நடத்தினார். இதனையடுத்து மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சபரீசனை கண்டித்து, ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திரண்டனர்.