அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாள் விழா - கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, மரக்கன்றுகள் வழங்கி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
Aug 18 2022 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதுடன், மரக்கன்றுகள் வழங்கி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி, அதிமுக முன்னாள் நிர்வாகி ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டின் பேரில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரில் உள்ள வழிவிடு வேல்முருகன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், மா, பலா, கொய்யா, புங்கமரம், நாவல், அத்தி என பல்வேறு வகையான மரக்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை ஒட்டி, வேலூரில் உள்ள புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.