சேலம் அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயி கைது
Sep 22 2022 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மானத்தாள் ஊராட்சி காங்க்காணிப்பட்டியில், ராஜகண்ணு என்ற விவசாயி, தனது
விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிடைத்த தகவலின்பேரில் தாரமங்கலம் காவல்துறையினர், விவசாய தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 26 செடிகளை பறிமுதல் செய்து ராஜகண்ணனை கைது செய்தனர்.